டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு

தேனி மாவட்டத்தில் உள்ள சுருளி அருவியில் தொடர் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

News image
சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு
Updated On :4 டிசம்பர் 2021, 7:22 am

DIN

கம்பம்: தேனி மாவட்டத்தில் உள்ள சுருளி அருவியில் தொடர் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

தேனி மாவட்டத்தில் தென்மேற்குத் தொடர்ச்சி மலையில் சுருளி அருவி அமைந்துள்ளது. தொடர் மழை காரணமாக நீர்வரத்துப் பகுதிகளான அரிசிப்பாறை, ஈத்தைப்பாறை நீர்ப்பிடிப்பு காட்டு ஓடைகளில் நீர் வரத்து அதிகரித்திருப்பதால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கரோனா தொற்று பரவல் காரணமாக சுருளி அருவி பகுதியில் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் கடந்த 2 ஆண்டுகளாக செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர்.

இதுகுறித்து புலிகள் காப்பக அலுவலர் ஒருவர் கூறும்போது, சுருளி அருவியில் தொடர் மழை காரணமாக கடந்த 3 நாட்களாக  வெள்ளப்பெருக்கு அதிகரித்து வருகிறது.

சுருளியாறு செல்லும் பகுதிகளிலும் காட்டு ஓடைகளில் வரும் தண்ணீரும் சேர்ந்து அதிகமாக நீர் வரத்து ஏற்பட்டு முல்லைப் பெரியாற்றில் கலக்கிறது என்று தெரிவித்தார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.