குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் ராணுவ உயர் அதிகாரிகள் சென்ற விமானப் படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் சிக்கிய விமானப்படை ஹெலிகாப்டரில் முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத், அவரது மனைவி மற்றும் உயர் அதிகாரிகள் பயணித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் சென்ற பயணிகளின் விவரம் வெளியாகியுள்ளது.
அதாவது தில்லியில் இருந்து சூலூர் சென்ற ஹெலிகாப்டரில் முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத், லெப்டினன்ட் கர்னல் ஹஜிந்தர் சிங் உள்ளிட்டோர் பயணித்துள்ளனர்.
இதையும் படிக்க | விபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்து: பிரதமர் மோடி அவசர ஆலோசனை
வெலிங்டன் ராணுவக் கல்லூரி ஆய்வுக்காக கோவையிலிருந்து சென்ற ஹெலிகாப்டர், குன்னூர் அருகே விபத்தில் சிக்கியது. இதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: விபின் ராவத் நிலை என்ன?