நெல்லையில் பள்ளிச் சுவர் இடிந்து விபத்து: 3 மாணவர்கள் பலி

திருநெல்வேலியில் டவுன் சாஃப்டர் பள்ளிச் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 மாணவர்கள் பலியாகியுள்ளனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
உயிரிழந்த மாணவர்கள் சுதிஷ், அன்பழகன், விஷ்வ பிரகாஷ்
உயிரிழந்த மாணவர்கள் சுதிஷ், அன்பழகன், விஷ்வ பிரகாஷ்
Published on
Updated on
2 min read

திருநெல்வேலியில் டவுன் சாஃப்டர் பள்ளிச் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 மாணவர்கள் பலியாகியுள்ளனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

நெல்லை நகர்ப் பகுதியிலுள்ள பொருள்காட்சித் திடல் அருகேவுள்ள டவுன் சாஃப்டர் மேல்நிலைப் பள்ளியின் கழிவறைச் சுவர் வெள்ளிக்கிழமை காலை இடிந்து விழுந்துள்ளது.

இந்த இடிபாடுகளில் சிக்கி விஸ்வ ரஞ்சன் (வகுப்பு 8ஏ), அன்பழகன் (வகுப்பு 9பி) ஆகியோர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுதிஷ்(வகுப்பு 6சி) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும் சேக் அபுபக்கர்(வகுப்பு 12 பி), சஞ்சய்(வகுப்பு 8ஏ), இசக்கி பிரகாஸ்(வகுப்பு 9பி), அப்துல்லா(வகுப்பு 7யு) ஆகியோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பள்ளிக்கு வெளியே குவிந்துள்ள மாணவர்கள்
பள்ளிக்கு வெளியே குவிந்துள்ள மாணவர்கள்

இதற்கிடையே, மாணவர்கள் உயிரிழந்ததை அறிந்த சக மாணவர்கள் பள்ளி வளாகத்தில் உள்ள பொருள்களை கோபத்தில் சேதப்படுத்தினர். இதனால் பள்ளி வளாகம் முழுவதும் பதட்டமான சூழல் நிலவியதை தொடர்ந்து பாதுகாப்பிற்காக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து பள்ளிக்கு வெளியே பதற்றத்துடன் குவிந்த பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

சம்பவ இடத்தில் ஆய்வு செய்யும் எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன்
சம்பவ இடத்தில் ஆய்வு செய்யும் எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன்

விபத்து குறித்து அறிந்த ஆட்சியர் விஷ்ணு, திருநெல்வேலி சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன், காவல் ஆணையர், தீயணைப்பு துறையினர், கல்வித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com