தமிழகத்தில் இன்று மேலும் 613 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மாநிலத்தில் இன்று ஒருநாளில் மட்டும் 1 லட்சத்தும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இன்று வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக சென்னையில் 125 பேருக்கும், கோவையில் 101 பேருக்கும், ஈரோட்டில் 46 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | இமாச்சலில் கடும்குளிர்: ஏரி உறைந்தது
இதனிடையே, கரோனா தொற்றிலிருந்து மேலும் 665 போ் விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 26,95,174ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 9 போ் பலியாகியதை அடுத்து நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,676-ஆக அதிகரித்துள்ளது.