தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஒமைக்ரான் கரோனா வகை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
ஏற்கனவே 34 பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் மொத்த பாதிப்பு 45ஆக அதிகரித்துள்ளது.
மேலும், ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்ட 11 பேரில் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும், சென்னையில் 7 பேர், திருவண்ணாமலை, கன்னியாகுமரி, திருவாரூரில் தலா ஒருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.
முன்னதாக தமிழகத்தில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டிருந்த 34 பேரில் 16 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாக இன்று காலை மத்திய சுகாதாரத்துறை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.