வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு சிவப்பு எச்சரிக்கை; 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இருநாள்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :31 டிசம்பர் 2021, 11:10 am

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இருநாள்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இன்று (டிச.31) நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதி கனமழை பெய்யும் என்பதால் சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய 10 மாவட்டங்களுக்கும் புதுச்சேரி, காரைக்காலுக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை (ஆரஞ்ச் அலர்ட்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

நாளை(ஜன. 1) திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களுக்கும் புதுவை, காரைக்காலுக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.