மீன்பிடித் தடைக்கால நிவாரணம் இனி ரூ.6,000

மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகையை உயர்த்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மீன்பிடித் தடைக்கால நிவாரணம் இனி ரூ.6,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது
மீன்பிடித் தடைக்கால நிவாரணம் இனி ரூ.6,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது


மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகையை உயர்த்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

முன்பு ரூ.5 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்பட்ட நிலையில், தற்போது ஆயிரம் ரூபாய் உயர்த்தி ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,  தேர்தல் வாக்குறுதியின்படி நடப்பாண்டு முதல் குடும்பம் ஒன்றுக்கு ரூ.6,000 நிவாரணம் வழங்கப்படும்.

தமிழகத்தில் 14 கடலோர மாவட்டங்களில் உள்ள 1.80 லட்சம் மீனவ குடும்பங்களுக்கு ரூ.108 கோடி நிவாரணத் தொகை தரப்படும். 

முதல்கட்டமாக 11 கடலோர மாவட்டங்களில் 1.24 லட்சம் மீனவ குடும்பங்களுக்கு நிவாரணம் தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com