மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகையை உயர்த்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
முன்பு ரூ.5 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்பட்ட நிலையில், தற்போது ஆயிரம் ரூபாய் உயர்த்தி ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தேர்தல் வாக்குறுதியின்படி நடப்பாண்டு முதல் குடும்பம் ஒன்றுக்கு ரூ.6,000 நிவாரணம் வழங்கப்படும்.
தமிழகத்தில் 14 கடலோர மாவட்டங்களில் உள்ள 1.80 லட்சம் மீனவ குடும்பங்களுக்கு ரூ.108 கோடி நிவாரணத் தொகை தரப்படும்.
முதல்கட்டமாக 11 கடலோர மாவட்டங்களில் 1.24 லட்சம் மீனவ குடும்பங்களுக்கு நிவாரணம் தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.