கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மணப்பாறை அருகே பள்ளிக்கு செல்ல ஆற்றினை கடந்து செல்லும் மாணவ, மாணவியர்கள்!

மணப்பாறை அருகே பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவியர்கள் ஆற்றினை கடந்து சேறும் சகதியில் நடந்து செல்வதால் நோய் தொற்று ஏற்படுமென பெற்றோர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

News image
சகதியில் நடந்தும் பள்ளிக்கு செல்லும் பிள்ளைகள்.
Updated On :17 நவம்பர் 2021, 6:38 am

எம்.ராஜசேகர்

மணப்பாறை அருகே பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவியர்கள் ஆற்றினை கடந்து சேறும் சகதியில் நடந்து செல்வதால் நோய் தொற்று ஏற்படுமென பெற்றோர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சியின் 3 ஆவது வார்டுக்குள்பட்ட பகுதி சங்கமரெட்டியப்பட்டி. இங்கு சுமார் 60 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். 

இப்பகுதி நகராட்சிக்குட்பட்ட பகுதியாக இருந்தாலும், தனித்துவிடப்பட்ட ஓர் குட்டி கிராமம். இங்கிருந்து சுமார் 40 மாணவ மாணவியர்கள் தங்களுக்கு கல்விக்காக பள்ளிக்கு செல்ல 3 கி.மீ. தொலைவில் உள்ள செவலூர், மணப்பாறை, குதிரைகுத்திப்பட்டி, ஆளிப்பட்டி, மாகாளிப்பட்டி ஆகிய பகுதிகளுக்கு தான் செல்லும் நிலை. தற்போது பெய்து வரும் பருவமழையால் குப்பாயிமலை பகுதியிலிருந்து மரவனூர் வரை செல்லும் உப்பாற்றில் தற்போது நீர்வரத்து இருந்து வருகிறது. 

Story image

ஆற்றினை கடந்து சேறும் சகதியில் நடந்து பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவியர்கள்.

இந்நிலையில், இந்த உப்பாற்றின் கால்வாய் பகுதிகளில் தடுப்பணை உடைந்து இருப்பதால், நீரில் இறங்கி கடந்து தான் சங்கமரெட்டியப்பட்டி மாணவ மாணவியர்கள் பள்ளிக்கு சென்று வருகின்றனர். 

மேலும் சங்கமரெட்டியப்பட்டியிலிருந்து செவலூர் - தொப்பம்பட்டியின் பிரதான சாலையை எட்டுவதற்கு சுமார் 1 கி.மீ. சகதிகளை மாணவ, மாணவியர்கள் கடந்து செல்லும் அவல நிலையும் உள்ளது. நடந்து செல்லும் மாணவ மாணவியர்களுக்கே இந்நிலை ஏன்றால், சைக்கிளில் செல்லும் மாணவியர்கள் நிலை அந்தோ பரிதாபம் தான்.

தினந்தோறும் ஆற்றில் இறங்கியும், சகதியில் நடந்தும் செல்லும் தங்களது பிள்ளைகளுக்கு நோய் தொற்று வந்துவிடும் என அச்சமடைந்து வரும் பெற்றோர்கள், ஆற்றை கடந்து செல்ல ஓர் பாலமும், சகதிகளை அகற்றி தரமான சாலையை மட்டுமே நகராட்சி நிர்வாகத்தினரிடம் கோரிக்கையாக வைக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.