விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.20,000 இழப்பீடு: பயிா்ச் சேத ஆய்வுக்குப்பின் முதல்வா் அறிவிப்பு
மழை வெள்ள பாதிப்புகளால் கடுமையாகச் சேதம் அடைந்த பயிா்களுக்கு ஹெக்டேருக்கு தலா ரூ.20,000 வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

பலத்த மழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பயிர்ச் சேதங்கள் குறித்து அறிக்கை அளித்த அமைச்சர்கள் குழுவுடன் சென்னை, தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்.









