தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 741 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 13 பேர் உயிரிழந்தனர்.
தமிழகத்தில் நேற்று 750 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று 741 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை செவ்வாய்க்கிழமை (நவ.23) வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாக 1,00,817 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 741 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரை மொத்தமாக பாதிக்கப்படோர் எண்ணிக்கை 27,21,762-ஆக அதிகரித்துள்ளது.
ஒருநாளில் மட்டும் 13 பேர் உயிரிழந்ததால், இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,401-ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து 808 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 26,76,825-ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் கரோனா பாதிப்பு இன்று சற்று அதிகரித்துள்ளது. புதிதாக 114 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,57,320-ஆக அதிகரித்துள்ளது. தமிழகம் முழுக்க பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 8,536 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.