திருப்பூர்: மூலனூர் கரையூர் அருகே அமராவதி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
திருப்பூா் மாவட்டம், மூலனூர் - தாராபுரம் சாலை, கரையூர் பக்கமுள்ள ஆத்துக்கால்புதூரில் அமராவதி ஆற்றில் சாலையிலுள்ள பாலத்தைத் தொட்டவாறு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதற்கடுத்து நல்ல தங்காள் ஓடை உள்ளது.
இந்நிலையில் கரையூர் ஆத்துக்கால்புதூர் பகுதி மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.