தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

தாமதமாக வந்த எம்எல்ஏவுக்காகக் காத்திருந்த அதிகாரிகள்!

தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டி பேரூராட்சியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைப்பதற்கு எம்எல்ஏ சரவணக்குமார் வருவதற்கு தாமதமானதால், சுமார் ஒன்றரை மணி நேரம் ஆட்சியர் உள்பட அதிகாரிகள்

News image
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் (கோப்புப்படம்)
Updated On :1 அக்டோபர் 2021, 9:07 am

DIN


தேனி: தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டி பேரூராட்சியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைப்பதற்கு எம்எல்ஏ சரவணக்குமார் வருவதற்கு தாமதமானதால், சுமார் ஒன்றரை மணி நேரம் ஆட்சியர் உள்பட அதிகாரிகள் ரோட்டில் காத்திருந்தனர்.

தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகேயுள்ள கெங்குவார்பட்டி பேரூராட்சியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் வெள்ளிக்கிழமை காலை 10:15 மணி அளவில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சட்டப்பேரவை உறுப்பினர் முன்னிலையில் திறக்கப்பட இருந்தது.  காலை 9:45 மணிக்கே மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரன் உள்பட மாவட்ட அதிகாரிகள், திமுக பிரமுகர்கள் திரண்டிருந்தனர்.

Story image

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைப்பதற்கு எம்எல்ஏ சரவணக்குமார் வருவதற்கு தாமதமானதால், சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக சாலையில் காத்திருந்த ஆட்சியர், அதிகாரிகள் மற்றும் திமுகவினர்.

இந்நிலையில், பெரியகுளம் சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏ சரவணக்குமார் வருவதற்கு தாமதமானதால் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக மாவட்ட ஆட்சியர் உள்பட மாவட்ட அதிகாரிகள் பலர் சாலையில் காத்திருந்தனர். 

காத்திருந்த வேளையில் அரசு பேருந்து, தனியார் பேருந்து மற்றும் இரு சக்கர வாகனங்களில் முகக் கவசம் அணியாமல் சென்ற நபர்களுக்கு அபராதம் விதித்தும், முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும் அறிவுறுத்தினார். 

Story image

கெங்குவார்பட்டி பேரூராட்சியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைப்பதற்கு எம்எல்ஏ சரவணக்குமார் வருவதற்கு தாமதமானதால், சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக சாலையில் காத்திருந்த விவசாயிகள்.

பின்னர் காலை 11 மணியளவில் தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வனுடன் வருகை தந்த பெரியகுளம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சரவணக்குமார் முன்னிலையில் அரசு நேரடி கொள்முதல் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

அதிகாரிகள் அனைவரும் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்து இந்த வழியில் செல்வோர் விசாரிக்க, விசாரிக்க சட்டப்பேரவை உறுப்பினர் வந்துசேர தாமதமான தகவல் பரவிக்கொண்டிருந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.