செம்பரம்பாக்கம் ஏரியில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை(அக்.20) ஆய்வு செய்யவுள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து நாளை காலை 10 மணிக்கு முதல்வர் ஆய்வு செய்கிறார்.