அரசு ஊழியர்களுக்கான பயனுள்ள அறிவிப்புகள்

தமிழக சட்டப்பேரவையில் அரசு ஊழியர்களுக்கான பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின்(கோப்புப்படம்)
மு.க.ஸ்டாலின்(கோப்புப்படம்)

தமிழக சட்டப்பேரவையில் அரசு ஊழியர்களுக்கான பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.

பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிவிப்புகள்:

  • தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வானது 2022 ஜனவரி முதல் அமல்படுத்தப்படும். இதன்மூலம் 16 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் பயன்பெறுவார்கள்.
  • சத்துணவு ஊழியர்களுக்கான ஓய்வு வயது 58லிருந்து 60ஆக உயர்த்தப்படும்.
  • அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்படும்.
  • அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படும்.
  • அரசு ஊழியர்கள் பயன்பெறும் விதமாக தனி தொலைபேசி உதவி மையம் அமைக்கப்படும்.
  • புதிதாக பணியில் சேரும் அரசு ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க அந்தந்த மாவட்டங்களிலேயே பயிற்சிகள் வழங்கப்படும்.
  • கடந்த 2017 முதல் அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தம், தற்காலிக பணிநீக்கம் ஆகிய நாள்களை வேலை நாள்களாக மாற்றம்.
  • போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ரத்து. பணியிடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் முந்தைய இடங்களுக்கே மாற்றம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com