புதுச்சேரியில் விநாயகர் சிலை வைப்பதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கக் கூடாது.
புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கக் கூடாது.
விநாயகர் சிலை வைப்பதற்கான இடங்களுக்கு காவல் துறையினரின் அனுமதியை பெற்றிருக்க வேண்டும்.
சிலை வைக்கப்படும் இடங்களில் கரோனா தடுப்பு விதிகளுடன் 25 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும்.
விநாயகர் சிலைகளை கரைக்க வாகனங்களில் எடுத்துச் செல்லலாம் ஆனால், ஊர்வலமாகச் செல்லத் தடை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.