பனாரஸ் பல்கலையில் பாரதியார் பெயரில் தமிழ் ஆய்வு இருக்கை: பிரதமர் மோடி

மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டை ஒட்டி சுப்ரமணிய பாரதியார் பெயரில் பனாரஸ் பல்கலைக்காகத்தில் தமிழ் ஆய்வு இருக்கை அமைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
பனாரஸ் பல்கலையில் பாரதியார் பெயரில் தமிழ் ஆய்வு இருக்கை: பிரதமர் மோடி
பனாரஸ் பல்கலையில் பாரதியார் பெயரில் தமிழ் ஆய்வு இருக்கை: பிரதமர் மோடி

மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டை ஒட்டி சுப்ரமணிய பாரதியார் பெயரில் பனாரஸ் பல்கலைக்காகத்தில் தமிழ் ஆய்வு இருக்கை அமைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

மகாகாவி சுப்பிரமணிய பாரதியாரின் நிறைவு நூற்றாண்டையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அறிவிப்பினை வெளியிட்டுப் பேசிய பிரதமர் மோடி, உலகின் மிகப் பழமையான மொழியான தமிழின் தாயகம் என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில்  தமிழ் படிப்புகள் தொடர்பாக ஆய்வு இருக்கை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் படிக்கவும் தமிழ் ஆய்வு மாணவர்களுக்கும் பாரதி தமிழ் ஆய்வு இருக்கை பயன்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com