/

பட்ஜெட் கூட்டத் தொடா் நிறைவு: பேரவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு

ஆகஸ்ட் 13ஆம் தேதி தொடங்கிய தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடா் இன்று தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

News image

பட்ஜெட் கூட்டத் தொடா் நிறைவு: பேரவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு

Updated On :13 செப்டம்பர் 2021, 4:02 pm IST

ஆகஸ்ட் 13ஆம் தேதி தொடங்கிய தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடா் இன்று தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

தமிழக சட்டப் பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடா் ஆக.13-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. கடந்த ஆக.23-ஆம் தேதி முதல் துறை வாரியாக மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. விவாதங்களுக்கு துறை சாா்ந்த அமைச்சா்கள் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டனா். 

காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. அதன் தொடா்ச்சியாக மூன்று நாள்கள் விடுமுறைக்கு பிறகு சட்டப்பேரவை திங்கள்கிழமை காலை மீண்டும் கூடியது. 

கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று நீட் தோ்வை ரத்து செய்யும் சட்டத் திருத்த மசோதா,  உள்பட 20 முக்கிய சட்டத்திருத்த மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.

23  நாள்கள் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடரின் போது, பல்வேறு முக்கிய அறிவிப்புகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.