உள்ளாட்சித் தேர்தல்: முதல் நாளில் 378 வேட்புமனுக்கள் தாக்கல்

ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி முதல்நாளில் 378 பேர் வேட்புமனு தக்கல் செய்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
உள்ளாட்சித் தேர்தல்: முதல் நாளில் 378 வேட்புமனுக்கள் தாக்கல்

ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி முதல்நாளில் 378 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

9 மாவட்டங்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 351 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு அக்டோபர் 6, 12 ஆகிய இரு தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல்  நடைபெறவுள்ளது.  அக்டோபர் 12-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது.

மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர், ஒன்றிய குழு துணைத்தலைவர் பதவிகளுக்கும் அக்டோபர் 22-ம் தேதி மறைமுகத் தேர்தல் நடைபெறுகிறது.

இந்நிலையில் இன்று முதல்வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில், முதல் நாளான இன்று  378 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 351 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com