சென்னை சைதாப்பேட்டை தடுப்பூசி முகாமில் முதல்வர் திடீர் ஆய்வு

தமிழகம் முழுவதும் இரண்டாம் கட்டமாக மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில் சென்னை சைதாப்பேட்டை தடுப்பூசி முகாமில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்


தமிழகம் முழுவதும் இரண்டாம் கட்டமாக மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில் சென்னை சைதாப்பேட்டை தடுப்பூசி முகாமில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். 

தமிழகத்தில் தடுப்பூசி இயக்கத்தைத் தீவிரப்படுத்தும் பொருட்டு மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி முதல்கட்ட கரோனா மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்ற நிலையில் இன்று(செப்.19) ஆம் தேதி இரண்டாம் கட்டமாக மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இன்று  15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் சைதாப்பேட்டை அருகே தடாக நகர் சமுதாயக்கூடத்தில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வரும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு திடீரென ஆய்வு செய்தார். 

தடுப்பூசி போட்டவர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன் அங்குள்ள குறிப்புகளை ஆய்வு செய்த பின்னர் புறப்பட்டார். முதல்வர் எந்தவித முன்னறிவிப்புமின்றி தடுப்பூசி முகாமில் ஆய்வு செய்துள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com