3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

மானாமதுரை மகா பஞ்சமுக பிரத்தியங்கிரா தேவி கோயிலில் பங்குனி அமாவாசை யாகம் 

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வேதியரேந்தல் விலக்கு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மகா பஞ்சமுக பிரத்தியங்கிரா தேவி கோயிலில் பங்குனி அமாவாசை யாகம் கடந்த வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. 

News image
மானாமதுரை மகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோயிலில் பங்குனி அமாவாசை யாகம் நடைபெற்றது.
Updated On :1 ஏப்ரல் 2022, 8:29 am

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வேதியரேந்தல் விலக்கு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மகா பஞ்சமுக பிரத்தியங்கிரா தேவி கோயிலில் பங்குனி அமாவாசை யாகம் கடந்த வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. 

இதையொட்டி கோயிலில் உள்ள யாகசாலையில் புனித நீர் கலசங்களை வைத்து யாகம் நடத்தப்பட்டது. தஞ்சை குருஜி கணபதி சுப்பிரமணியம் சாஸ்திரிகள் யாகத்தை நடத்தினார். அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி நடைபெற்ற இந்த யாகத்தில் யாகத்தில் மிளகு, திரவியப் பொருள்கள், பட்டுப் புடவைகள், பூமாலைகள், தங்கம், வெள்ளி, இனிப்பு வகைகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் இடப்பட்டன. 

Story image

யாகத்தைக் கண்டு தரிசிக்க கோயிலுக்குள் திரண்டிருந்த பக்தர்கள்.

பூர்ணாஹுதி முடிந்தது மகா தீபாராதனை நடைபெற்றுதும் கடம் புறப்பாடு நடைபெற்றது. அதன்பின் மூலவர் பிரத்தியங்கிராதேவிக்கு புனித நீரால் பாத சமர்ப்பணம் நடைபெற்று மகா தீபாராதனை காட்டப்பட்டது. 

கோயிலில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் யாகத்தைக் கண்டு தரிசித்தனர். 

இதற்கான ஏற்பாடுகளை மகா பஞ்சமுக பிரத்யங்கிரா மடாலய நிர்வாகி ஞானசேகரன் சுவாமிகள் செய்திருந்தார். யாகத்தை முன்னிட்டு கோயிலில் அன்னதானம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.