சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

‘சொத்து வரி உயர்வால் வாடகை அதிகரிக்கும்’: எடப்பாடி பழனிசாமி

சொத்து வரி உயர்வால் வாடகை அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

News image
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
Updated On :6 ஏப்ரல் 2022, 7:04 am

DIN

சொத்து வரி உயர்வால் வாடகை அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் சொத்து வரி உயர்த்தப்பட்டதற்கு விளக்கம் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பேசினார். முதல்வரின் பதில் திருப்தியளிக்காததால் அதிமுக, பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

“மக்கள் அதிர்ச்சி அடையும் அளவிற்கு கடுமையாக சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. கரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் சொத்து வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும் என அமைச்சரிடம் வலியுறுத்தினோம்.

சொத்து வரியை உயர்த்த வேண்டும் என மத்திய அரசு கூறியதாக தெரிவித்துள்ளனர். ஆனால், மத்திய அரசின் அறிவிப்பில் எந்த இடத்திலும் சொத்து வரியை கண்டிப்பாக உயர்த்த வேண்டும் எனக் குறிப்பிடவில்லை.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் வசிக்கும் மக்கள் வரி உயர்வால் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். வாடகை வீட்டில் வசிக்கும் மக்களுக்கும் சொத்து வரி உயர்வால், வாடகை அதிகமாக கொடுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.”

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.