உள்ளாட்சித் தேர்தல் முடிந்ததும் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது: எடப்பாடி பழனிசாமி
சொத்து வரி உயர்வு குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்து, சட்டப்பேரவையிலிருந்து அதிமுக, பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.


சென்னை: சொத்து வரி உயர்வு குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்து, சட்டப்பேரவையிலிருந்து அதிமுக, பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
சட்டப்பேரவைக்கு வெளியில் வந்த எம்எல்ஏக்கள் அனைவரும், சொத்து வரி உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
சொத்து வரி உயர்வை திரும்பப் பெறுவது குறித்து பரிசீலனை செய்யுமாறு எதிர்க்கட்சிகள் கோரிய நிலையில், சொத்து வரி உயர்வை மனமுவந்து செய்யவில்லை என்றும், தவிர்க்க முடியாது என்பதால் மக்கள் துணை நிற்க வேண்டும் என்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
இதையும் படிக்கலாம்.. பிரிட்டனில் 11 வயதில் உறங்கி, 21 வயதில் விழித்தவர்: நம்பமுடியவில்லையா?
முதல்வரின் விளக்கத்தை ஏற்க மறுத்தும், சொத்து வரி உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும் அதிமுக, பாஜக உறுப்பினர்கள் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
பேரவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சொத்து வரியை உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசு எந்த இடத்திலும் சொல்லவில்லை. உள்ளாட்சித் தேர்தல் முடிந்ததும் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...