ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

வள்ளுவர்கோட்டத்தில் மேம்பாலம், பெசன்ட்நகர் கடற்கரையில் நிரந்தரபாதை: கே.என். நேரு 

தமிழக சட்டப்பேரவையில் இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் அமைச்சர் கே.என். நேரு மானியக் கோரிக்கையை  தாக்கல் செய்தார்.

News image

கே.என். நேரு (கோப்புப்படம்)

Updated On :7 ஏப்ரல் 2022, 4:28 pm IST

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் அமைச்சர் கே.என். நேரு மானியக் கோரிக்கையை  தாக்கல் செய்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 56 புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

முக்கிய அறிவிப்புகள் விவரம்..

1. தூய்மை பணியாளர்களுக்கு பல்வேறு அரசு நலத்திட்டங்களை ஒருங்கிணைத்து பயன்பெறச் செய்ய நடவடிக்கை. மாற்றுத் தொழில் தொடங்க, வங்கிகள் மூலம் சிறு கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

2. சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்.

3. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் மக்கள் பிரதிநிதிகளுக்கும் பயிற்சி அளித்தல்.

4. சென்னையில் ரூ.400 கோடி மதிப்பீட்டில், ஏனைய மாநகராடசி மற்றும் நகராடசிகளில் ரூ.275 கோடி மதிப்பீட்டிலும் மழைவெள்ளம், குடிநீர் மற்றும் பாதாரச் சாக்கடை திட்டப் பணிகளால் பழுதடைந்த சாலைகள் மேம்படுத்தப்படும்.

5. தமிழகம் முழுவதும் கோவை, கரூர் உள்ளிட்ட நகராட்சிகளில் 53 புதிய சந்தைகள் உருவாக்கப்படும்.

6. பிராட்வே பேருந்து நிலையத்தில் பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து நிலையம் அமைக்கப்படும்.

7. சென்னை, மதுரை, கோவையில் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டங்கள் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

8. பேரூராட்சிகளில் 11,253 வீடற்ற ஏழைகளுக்கு, அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு ஒன்றிற்கு ரூ.2.10 லட்சம் மானியமாக வழங்கப்படும்.

9. சென்னை வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் புதிய மேம்பாலம் அமைக்கப்படும்.

10. சென்னை மெரீனாவைப் போல, பெசன்ட் நகர் கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிரந்தர மர நடைபாதை ரூ.1கோடியில் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.