உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

வள்ளுவர்கோட்டத்தில் மேம்பாலம், பெசன்ட்நகர் கடற்கரையில் நிரந்தரபாதை: கே.என். நேரு 

தமிழக சட்டப்பேரவையில் இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் அமைச்சர் கே.என். நேரு மானியக் கோரிக்கையை  தாக்கல் செய்தார்.

News image
கே.என். நேரு (கோப்புப்படம்)
Updated On :7 ஏப்ரல் 2022, 10:58 am

DIN

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் அமைச்சர் கே.என். நேரு மானியக் கோரிக்கையை  தாக்கல் செய்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 56 புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

முக்கிய அறிவிப்புகள் விவரம்..

1. தூய்மை பணியாளர்களுக்கு பல்வேறு அரசு நலத்திட்டங்களை ஒருங்கிணைத்து பயன்பெறச் செய்ய நடவடிக்கை. மாற்றுத் தொழில் தொடங்க, வங்கிகள் மூலம் சிறு கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

2. சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்.

3. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் மக்கள் பிரதிநிதிகளுக்கும் பயிற்சி அளித்தல்.

4. சென்னையில் ரூ.400 கோடி மதிப்பீட்டில், ஏனைய மாநகராடசி மற்றும் நகராடசிகளில் ரூ.275 கோடி மதிப்பீட்டிலும் மழைவெள்ளம், குடிநீர் மற்றும் பாதாரச் சாக்கடை திட்டப் பணிகளால் பழுதடைந்த சாலைகள் மேம்படுத்தப்படும்.

5. தமிழகம் முழுவதும் கோவை, கரூர் உள்ளிட்ட நகராட்சிகளில் 53 புதிய சந்தைகள் உருவாக்கப்படும்.

6. பிராட்வே பேருந்து நிலையத்தில் பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து நிலையம் அமைக்கப்படும்.

7. சென்னை, மதுரை, கோவையில் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டங்கள் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

8. பேரூராட்சிகளில் 11,253 வீடற்ற ஏழைகளுக்கு, அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு ஒன்றிற்கு ரூ.2.10 லட்சம் மானியமாக வழங்கப்படும்.

9. சென்னை வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் புதிய மேம்பாலம் அமைக்கப்படும்.

10. சென்னை மெரீனாவைப் போல, பெசன்ட் நகர் கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிரந்தர மர நடைபாதை ரூ.1கோடியில் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.