ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வேலூர் பழைய பிளாஸ்டிக் கிடங்கில் தீ விபத்து: ரூ.15 லட்சம் பொருட்கள் சேதம்

வேலூர் கொணவட்டம் பகுதியிலுள்ள பிளாஸ்டிக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால் ரூ.15 லட்சம் பழைய பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

News image
Updated On :9 ஏப்ரல் 2022, 7:09 am

DIN

வேலூர் கொணவட்டம் பகுதியிலுள்ள பிளாஸ்டிக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால் ரூ.15 லட்சம் பழைய பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. தீ விபத்தையொட்டி அப்பகுதி முழுவதும் நச்சுப் புகை பரவியதால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகினர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்தவர் முனீர். இவர் வேலூர் மாவட்டம் கொணவட்டம் பொன்னியம்மன் கோயில் தெருவில் ரபீக் அகமது என்பவருக்கு சொந்தமான இடத்தில் பழைய பிளாஸ்டிக் கிடங்கு நடத்தி வருகிறார். இந்த கிடங்கில் பழைய பிளாஸ்டிக் கழிவுகளை அரைத்து பொடியாக்கி அதனை ஏற்றுமதி செய்து வரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் அரவை செய்வதற்காக ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் கிடங்கில் குவித்து வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பிளாஸ்டிக் கிடங்கில் சனிக்கிழமை அதிகாலை சுமார் 2 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பிளாஸ்டிக் கழிவுகள் மீது பற்றிய தீ வேகமாக பரவியதுடன், புகை மண்டலமாக காணப்பட்டது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் வேலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியதால் தீயைக் கட்டுப்படுத்த முடியாத ஏற்பட்டது.

இதையடுத்து, காட்பாடியிலிருந்து கூடுதலாக ஒரு தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி நடைபெற்றது. அதன்படி, காலை 8 மணி வரை சுமார் 6 மணி நேரம் போராடி தீயை முழுமையாக அணைத்தனர். இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த பிளாஸ்டிக் கழிவுகள், இயந்திரங்கள் உள்பட சுமார் ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. கிடங்கில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனத் தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். எனினும், தீ விபத்துக்கான காரணம் குறித்து வேலூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பழைய பிளாஸ்டிக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தையொட்டி அப்பகுதி முழுவதும் நச்சுப்புகை பரவியதால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.