நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

‘அரசியலை புகுத்தி பாஜகவை பலப்படுத்துவது நடக்கவே நடக்காது’: பேரவையில் முதல்வர்

அரசியலை புகுத்தி உங்கள் கட்சியை பலப்படுத்துவது நடக்கவே நடக்காது என்று வானதி சீனிவாசனின் கவனஈர்ப்பு தீர்மானத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

News image
முதல்வர் மு.க.ஸ்டாலின்
Updated On :12 ஏப்ரல் 2022, 10:33 am

DIN

அரசியலை புகுத்தி உங்கள் கட்சியை பலப்படுத்துவது நடக்கவே நடக்காது என்று வானதி சீனிவாசனின் கவனஈர்ப்பு தீர்மானத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

மேற்கு மாம்பலம் அயோத்யா மண்டபம் குறித்து தமிழக சட்டப்பேரவையில் பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

இந்த தீர்மானம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

“ஏழை மக்களை பாதிக்கக்கூடிய பிரச்னைகளில் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலை அதிகரித்துக் கொண்டு போகிறது. அதை கட்டுப்படுத்த மத்திய அரசுக்கு நீங்கள் வலியுறுத்த வேண்டும்.

அதுமட்டுமின்றி, மாநில அரசுக்கு வரவேண்டிய நிதிகளை பெறுவதற்கு உறுதுணையாக இருந்து அதை பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மாநில மக்களுக்கு எது சாதகம் என்பதை புரிந்து நடக்க வேண்டும். தேவையில்லாமல் அரசியலை புகுத்தி உங்கள் கட்சியை பலப்படுத்த நினைத்தால், அது நடக்கவே நடக்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.