அரசியலை புகுத்தி உங்கள் கட்சியை பலப்படுத்துவது நடக்கவே நடக்காது என்று வானதி சீனிவாசனின் கவனஈர்ப்பு தீர்மானத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
மேற்கு மாம்பலம் அயோத்யா மண்டபம் குறித்து தமிழக சட்டப்பேரவையில் பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
இந்த தீர்மானம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
“ஏழை மக்களை பாதிக்கக்கூடிய பிரச்னைகளில் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலை அதிகரித்துக் கொண்டு போகிறது. அதை கட்டுப்படுத்த மத்திய அரசுக்கு நீங்கள் வலியுறுத்த வேண்டும்.
அதுமட்டுமின்றி, மாநில அரசுக்கு வரவேண்டிய நிதிகளை பெறுவதற்கு உறுதுணையாக இருந்து அதை பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
மாநில மக்களுக்கு எது சாதகம் என்பதை புரிந்து நடக்க வேண்டும். தேவையில்லாமல் அரசியலை புகுத்தி உங்கள் கட்சியை பலப்படுத்த நினைத்தால், அது நடக்கவே நடக்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பொத்தானை அழுத்தினால் பணம்..! கவனம் ஈர்க்கும் கான் சிட்டி படத் தலைப்பு டீசர்!

கருப்பு படத்தின் தயாரிப்பாளருக்கும் ஆர்.ஜே. பாலாஜிக்கும் சண்டையா?

ஈரான் போர்! குவைத் மீதான தாக்குதலில் 61 வீரர்கள் படுகாயம்!

அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான ப்ளூ பிரிண்ட்! - ஸ்டாலினின் 14 முக்கிய அம்சங்கள்!!
வீடியோக்கள்

திருநள்ளாற்றில் சனிப் பெயர்ச்சி விழா! | Temple | ஆன்மிகம்
தினமணி வீடியோ செய்தி...

எங்களை வைத்துதான் காங்கிரஸ் கூடுதல் சீட் பெற்றார்கள்!: செங்கோட்டையன் | TVK | Vijay
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 8 முதல் 14 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Podcast | செல்வப்பெருந்தகை சந்தித்த சவால்கள் | News and Views | Epi - 11
தினமணி வீடியோ செய்தி...

