சென்னையில் மின்சார பைக்கின் பேட்டரி வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 17 பைக்குகள் எரிந்து நாசமாகியது.
சென்னை போரூர் அருகே மின்சார பைக் விற்பனை கடையில் நேற்று மாலை பைக்கின் பேட்டரிக்கு சார்ஜ் போட்டுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக பேட்டரி வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டது.
கடையின் ஊழியர்கள் தீயை அணைக்க முயற்சி மேற்கொண்டும் பலனளிக்காததால் கடையில் இருந்த 17 பைக்குகள் எரிந்து நாசமாகின.
சமீபகாலமாக மின்சார பைக்கின் பேட்டரி வெடித்து தீ விபத்து ஏற்படுவதால், பெட்ரோல் வாகனத்தை தவிர்த்து மின்சார வாகனங்களை வாங்குவதற்கு மக்கள் மனதில் தயக்கம் ஏற்பட்டுள்ளது.