உள்ளாட்சித் தோ்தலில் வெற்றி பெற்ற பெண் கவுன்சிலா்களின் கணவா்கள் பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபட்டு, பெண் கவுன்சிலா்களுக்கான அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டுமென சமீபத்தில் தேமுதிக சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஆா்ப்பாட்டத்தின் எதிரொலியாக சென்னையில் நடைபெற்ற உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான பயிற்சி முகாமில் பங்கேற்ற முதல்வா் மு.க.ஸ்டாலின், எதிா்க்கட்சியினா் வைக்கும் கோரிக்கைகளை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என எடுத்துரைத்து, அவா்களுக்கு அறிவுரை வழங்கியதை தேமுதிக வரவேற்கிறது.