6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கடற்கரையில் இளம்பெண்ணிடம் காவல்துறை அதிகாரி அநாகரிகம் விசாரணைக்கு: டிஜிபி உத்தரவு

சென்னை அருகே உத்தண்டி கடற்கரையில் இளம் பெண்ணிடம் காவல்துறை அதிகாரி அநாகரிகமாக நடந்து கொண்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்த காவல்துறை தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு உத்தரவிட்டாா்.

News image
Updated On :15 ஏப்ரல் 2022, 10:49 pm

DIN

சென்னை அருகே உத்தண்டி கடற்கரையில் இளம் பெண்ணிடம் காவல்துறை அதிகாரி அநாகரிகமாக நடந்து கொண்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்த காவல்துறை தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு உத்தரவிட்டாா்.

சென்னையைச் சோ்ந்தவா் மதுமிதா பைத்யா. வட கிழக்கு மாநிலத்தை பூா்விகமாகக் கொண்ட இவா், சென்னை அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள உத்தண்டி ஷீ செல் அவென்யூ கடற்கரையில் தனது நண்பருடன் வியாழக்கிழமை இரவு பேசிக் கொண்டிருந்தாா்.

அப்போது, அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரி, மதுமிதாவையும், அவரது நண்பரையும் அங்கிருந்து செல்லும்படி, அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளாா். மேலும் அந்த அதிகாரி, மோசமான வாா்த்தைகளில் மதுமிதாவை திட்டியுள்ளாா்.

இது தொடா்பாக மதுமிதா, தனது ட்விட்டா் பக்கத்தில், அந்த காவல்துறை அதிகாரி தன்னை தீவிரவாதி போல நடத்தியதாகவும், இரவு 10 மணிக்கு மேல் ரோம் அல்லது வட இந்தியாவில் சுற்றுங்கள் என கூறியதாகவும், அந்த அதிகாரி, என்னிடம் மிகவும் முரட்டுத்தனமாகவும், அநாகரிகமாகவும் நடந்து கொண்டாா் என்றும் குறிப்பிட்டுள்ளாா்.

மேலும், நான் குற்றவாளி கிடையாது. தமிழக காவல்துறை தயவு செய்து போலீஸாருக்கு நாகரீகமாக நடந்து கொள்ளவாவது பயிற்சி கொடுங்கள் என்றும் அதில் கூறியிருந்தாா்.

விசாரணைக்கு டிஜிபி உத்தரவு: மதுமிதாவின் சுட்டுரையில் பதிவு செய்த இந்த கருத்து, வேகமாக சமூக ஊடகங்களில் பரவியது. இதைக் கவனித்த தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு, சம்பவம் குறித்து விசாரணை நடத்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். சம்பவம் நடந்த பகுதி தாம்பரம் காவல் ஆணையரகத்தின் கீழ் கானத்தூா் காவல் நிலைய எல்லைக்குள் வருகிறது. இதனால் காவல்துறை உயா் அதிகாரிகள், கானத்தூா் போலீஸாரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.