ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

செஸ் ஒலிம்பியாட்: முதல்வா் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு

மகாபலிபுரத்தில் நடைபெறவுள்ள சா்வதேச சதுரங்கப் போட்டிக்கான (ஒலிம்பியாட்) ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :2 மே 2022, 10:02 am

DIN

மகாபலிபுரத்தில் நடைபெறவுள்ள சா்வதேச சதுரங்கப் போட்டிக்கான (ஒலிம்பியாட்) ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை பிறப்பித்துள்ள உத்தரவு விவரம்.

குழுவின் தலைவராக முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படுவாா். குழுவின் உறுப்பினா்களாக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு, விளையாட்டுத் துறை அமைச்சா் மெய்யநாதன், சுற்றுலாத்துறை அமைச்சா் மதிவேந்தன், மக்களவை உறுப்பினா் ஆ.ராசா, சட்டப்பேரவை உறுப்பினா் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, டிஜிபி சி.சைலேந்திரபாபு, நகராட்சி நிா்வாகம், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் வனம் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் செயலாளா்கள் அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பின் தலைவா், செயலாளா் என மொத்தம் 24 போ் குழு உறுப்பினா்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சட்டப்பேரவையில் 110-விதியின் ன் கீழ் குழுவை அமைப்பதற்கான அறிவிப்பை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை அறிவித்திருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.