ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தூத்துக்குடிக்கு 60,000 மெட்ரிக் டன் நிலக்கரி: மின் உற்பத்தி தொடக்கம்

தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்கு கப்பல் மூலம் 60,000 மெட்ரிக் டன் நிலக்கரி வந்ததையடுத்து அனைத்து யூனிட்டுகளிலும் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. 

News image
Updated On :22 ஏப்ரல் 2022, 8:14 am

DIN

தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்கு கப்பல் மூலம் 60,000 மெட்ரிக் டன் நிலக்கரி வந்ததையடுத்து அனைத்து யூனிட்டுகளிலும் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. 

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நேற்று நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டதையடுத்து மொத்தமுள்ள 5 யூனிட்டுகளில் 3 யூனிட்டுகள் நிறுத்தப்பட்டன. 2 மற்றும் 4 ஆவது யூனிட் மட்டும் செயல்பட்டு வந்தது. இதனால் 630 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டது. 

இந்நிலையில் இன்று தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்கு கப்பல் மூலம் 60,000 மெட்ரிக் டன் நிலக்கரி வந்ததையடுத்து அனைத்து யூனிட்டுகளிலும் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. 

தமிழகத்துக்குத் தேவையான நிலக்கரியை ஒதுக்கீடு செய்ய மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.

தமிழகத்தில் நிலக்கரி தட்டுப்பாட்டால் மின் உற்பத்தி பாதிக்கப்படுவதாக சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று விளக்கமளித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.