தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தேர் விபத்து: தமிழக பேரவையில் இன்று கவனஈர்ப்பு தீர்மானம்

தஞ்சாவூர் தேர் திருவிழா விபத்து குறித்து தமிழக சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சிகளும் இன்று கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image

சட்டப் பேரவை

Updated On :27 ஏப்ரல் 2022, 3:12 am

DIN

தஞ்சாவூர் தேர் திருவிழா விபத்து குறித்து தமிழக சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சிகளும் இன்று கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் புதன்கிழமை அதிகாலை நடைபெற்ற தேர்த் திருவிழாவில் மின்சாரம் தாக்கியதில்  11 பேர் உயிரிழந்தனர். மேலும் 13 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து தமிழக சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சிகளும் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தஞ்சாவூரில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின், விபத்து குறித்து நேரில் ஆய்வு செய்ய செல்வதால், கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக தலா ரூ. 5 லட்சம் வழங்கவும், காயமடைந்த 15 பேருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் முதல்வர் ஸ்டாலின் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.