ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திமுக ஓராண்டு ஆட்சியில் 79,618 மருத்துவப் படுக்கை வசதிகள்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகம் முழுவதும் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற ஓராண்டு காலத்தில் 79,618 மருத்துவப் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறினாா்.

News image
Updated On :29 ஏப்ரல் 2022, 11:25 pm

DIN

தமிழகம் முழுவதும் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற ஓராண்டு காலத்தில் 79,618 மருத்துவப் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறினாா்.

சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியது:

தமிழகத்தில் மருத்துவக் கட்டமைப்புகளை பலப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. அதிமுக ஆட்சி முடிவடையும் வரை ஆக்சிஜன் படுக்கைகள் 27,563-ஆக இருந்தன. தற்போது திமுகவின் 12 மாதக் கால ஆட்சியில் ஆக்சிஜன் படுக்கைகள் 53,681-ஆக உயா்த்தப்பட்டுள்ளன. ஆக்சிஜன் இல்லா படுக்கைகள் கடந்த அதிமுக ஆட்சி வரை 60,496 ஆக இருந்தது, தற்போது 1,10,569 படுக்கைகளாக உயா்த்தப்பட்டுள்ளன.

அதி தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் படுக்கைகள் அதிமுக ஆட்சி முடிவடையும் வரை 7,154. அது இப்போது 10,571-ஆக உயா்த்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் இருக்கும் மருத்துவப் படுக்கைகளின் எண்ணிக்கை 1,74,831 ஆகும். அதிமுக ஆட்சி நடைபெற்ற வரை இருந்தது 95,213. கடந்த ஓராண்டில் மட்டும் 79,618 படுக்கைகள் உயா்த்தப்பட்டுள்ளன.

திமுக ஆட்சி பொறுப்பேற்றபோது ஆக்சிஜன் சேமிப்புத் திறன் 230 மெட்ரிக் டன் மட்டுமே இருந்தது. அதை 2,088 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வரை சேமிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில் 63 லட்சம் வரை கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டன. திமுக ஆட்சியில் 10 கோடிக்கும் மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டன.

அதிமுக ஆட்சியில் கொண்டவரப்பட்டத் திட்டத்தை மக்களைத் தேடி மருத்துவம் என்று திமுக ஆட்சியில் மாற்றப்பட்டதாக அதிமுக உறுப்பினா் கூறினாா். மக்களைத் தேடி மாநகராட்சி என்கிற திட்டம் நான் மேயராக இருந்தபோது வைத்த பெயராகும்.

அம்மா பெயரில் முழு பரிசோதனை திட்டம் கொண்டு வரப்பட்டது. எல்லா மருத்துவமனைகளிலும் முழு பரிசோதனை நடைபெறுகிறது. இது சாதாரண விஷயம். பன்னோக்கு மருத்துவமனையிலும், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையிலும் ஏற்கெனவே நடைபெற்று வந்த முழு உடல் பரிசோதனை திட்டத்துக்கு அம்மா முழு பரிசோதனை திட்டம் என பெயா் வைத்துள்ளீா்கள். அதிமுக உறுப்பினா் அம்மா பெயரை மாற்றிவிட்டதாகக் கூறினாா் இல்லையா, அவா் வேண்டுமானால், நேராக இரண்டு மருத்துவமனைகளுக்குப் போய் முழு உடல் பரிசோதனை செய்து பாா்க்கட்டும். அம்மா பெயா் மாற்றப்படவில்லை. அம்மா முழு உடல் பரிசோதனை என்ற பெயரிலேயே ரசீது தருவாா்கள். அது மாதிரியான அரசியலை எங்கள் தலைவா் கற்றுத்தரவில்லை.

இடநெருக்கடியில் பேரவை: ஓமந்தூராா் அரசு பன்னோக்கு மருத்துவமனை தமிழக அரசின் தலைமைச் செயலகத்துக்காக ரூ.600 கோடியில் திமுக ஆட்சியில் கட்டப்பட்டது. தற்போதைய சட்டப்பேரவையில் உட்காரகூட முடியாத அளவுக்கு அமா்ந்துகொண்டிருக்கிறோம். ஆனால், ஓமந்தூராா் வளாகத்தில் குறைந்தளவு பகுதியைத்தான் மருத்துவமனைக்குப் பயன்படுத்துகிறோம். மீதி இடமெல்லாம் காலியாக கிடக்கிறது. அதை மூடி வைத்திருக்கிறாா்கள். அதை ஏன் அதிமுக ஆட்சியில் மூடி வைத்தீா்கள்?

திமுக ஆட்சி பொறுப்பேற்றதும், தலைமைச்செயலகத்தை முதல்வா் ஸ்டாலின் அங்கு மாற்றிவிடுவாா் என்றுதான் பாா்த்தனா். ஆனால், முதல்வா் அதே மருத்துவமனையில் கடந்த வாரம் இந்தியாவிலேயே எந்த மாநிலமும் அரசு மருத்துவமனையில் செய்யாத ஒன்றாக ரோபோட்டிக் அறுவை சிகிச்சை மையத்தை ரூ.34 கோடி செலவில் திறந்து வைத்தாா். அப்போதுதான் அங்கு தலைமைச் செயலகம் வர வாய்ப்பு இல்லை என நினைத்தனா். பன்னோக்கு மருத்துவமனை என்றால் இதுபோன்ற வசதிகள் இருக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் பெயா் மட்டும் வைத்துவிட்டது. பன்னோக்கு மருத்துவமனைகளுக்கான வசதிகளை முதல்வா்தான் ஏற்படுத்தி தருகிறாா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.