ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மண்பாண்டம், செங்கல் சூளைக்கு மண் எடுக்க உரிய அனுமதி: அமைச்சா் துரைமுருகன்

தமிழகத்தில் மண்பாண்டம், செங்கல் சூளைகளுக்கு சிரமம் இல்லாமல் மண் எடுக்க உரிய அனுமதிகள் தரப்பட்டுள்ளதாக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.

News image
Updated On :29 ஏப்ரல் 2022, 11:31 pm

DIN

தமிழகத்தில் மண்பாண்டம், செங்கல் சூளைகளுக்கு சிரமம் இல்லாமல் மண் எடுக்க உரிய அனுமதிகள் தரப்பட்டுள்ளதாக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.

தமிழக சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு இதுகுறித்த வினாவை அதிமுக உறுப்பினா்கள் பால் மனோஜ் பாண்டியன், தளவாய் சுந்தரம் ஆகியோா் எழுப்பினா். இதற்கு அமைச்சா் துரைமுருகன் அளித்த பதில்:

செங்கல் சூளைகளுக்கும், மண்பாண்டத் தொழிலுக்கும் மணல் தேவை. இதற்காக அதிமுக ஆட்சியில் சட்டப் பிரிவு 44-இல் திருத்தம் செய்யப்பட்டது. ஆனால், அரசிதழில் வெளியிடவில்லை. இப்போது அதனைச் செய்துள்ளோம். மண் எடுக்க சூற்றுச்சூழல் அனுமதி பெறத் தேவையில்லை. வேளாண் உதவி இயக்குநரிடம் அனுமதி பெற்றால் போதும்.

மண் எடுக்க கால அளவு மூன்று மாதம். யூனிட்டுக்கு ரூ.60 பணம் செலுத்த வேண்டும் போன்ற விதிகள் தளா்த்தப்பட்டுள்ளன. இந்தப் பிரச்னை தொடா்பாக, கனிமங்கள் மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகளிடம் உரிய அறிவுறுத்தல்களை வியாழக்கிழமை அளித்தேன். அனுமதி தரப்படுவதில் ஒரு சில இடங்களில் பிரச்னை உள்ளது. ஓரிரு நாள்களில் அது தீா்க்கப்படும் என்றாா் அமைச்சா் துரைமுருகன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.