அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

சாலை இல்லாததால் சிறுவனின் உடலை டோலி கட்டித் தூக்கிச்சென்ற கிராம மக்கள்

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே சாலை வசதி இல்லாததால் இறந்த சிறுவனின் உடலை 3 கிலோ மீட்டர் தூரம் டோலி கட்டி தூக்கிச் சென்ற அவலம் நடந்துள்ளது.

News image
சாலை இல்லாததால் சிறுவனின் உடலை டோலி கட்டித் தூக்கிச்சென்ற கிராம மக்கள்
Updated On :1 பிப்ரவரி 2024, 9:57 am

DIN

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே சாலை வசதி இல்லாததால் இறந்த சிறுவனின் உடலை 3 கிலோ மீட்டர் தூரம் டோலி கட்டி தூக்கிச் சென்ற அவலம் நடந்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கதவாளம் ஊராட்சிக்கு உட்பட்ட குப்புராஜபாளையம் அருகே உள்ள கணவாய் மேடு குட்டை பகுதியில் சுமார் 50கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில் வனப்பகுதியை ஓட்டி அமைந்துள்ளதால் இதுவரை இக்கிராமத்திற்கு சாலை வசதி இல்லை.

அர்ஜுன்

அர்ஜுன்

கணவாய் மேடு ஸ்கூல் தோப்பு பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சிவன் என்பவரது 12 வயது மகன் அர்ஜுன்.  ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது அர்ஜுனை  விஷப்பாம்பு கடித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் மயக்கம் அடைந்த சிறுவனை அப்பகுதி மக்கள் தோல் மீது சுமந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் பயணித்து பின்னர் இருசக்கர வாகனத்தில் ஏற்றி ஆம்பூர்  அரசு ஆரம்ப மருத்துவனைக்கு  அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அர்ஜுனை பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக வேலூர் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைத்த நிலையில் வேலூர் அரசு மருத்துவமனையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான்.

இதனை தொடர்ந்து சிறுவனின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் கதவாளம் அடிவார பகுதிக்கு கொண்டு வந்த உறவினர்கள் கொட்டும் மழையிலும்  சிறுவனின் உடலை டோலி கட்டி  கணவாய்மேடு வரை சுமார் 3 கிமீ தூரம் தூக்கிச் சென்று இறுதிச் சடங்குகளை செய்து உடனடியாக சிறுவனின் உடலை நல்லடக்கம் செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.