எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

காவிரி கரையோர பகுதியில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
Updated On :2 ஆகஸ்ட் 2022, 9:15 am

DIN

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு எதிரொலியாக, உபரி நீர் அதிகளவில் திறக்கப்பட உள்ளதால் காவிரி கரையோர பகுதியில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாகவும் மற்றும் மேட்டூர் சுற்றுவட்டார பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கடந்த 15 நாள்களுக்கு மேலாக மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியில் உள்ளது.

Story image

இதனால் மேட்டூர் அணைக்கு வரும் உபரி நீர், அணையின் நீர் மின் நிலையம் வழியாகவும் 16 கண் பாலம் வழியாகவும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில்  மேட்டூர் அணைக்கு தற்போது  நீர்வரத்து அதிகரித்துள்ளது.

தற்போது 53 ஆயிரம் கனடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த தண்ணீர் அனைத்தும் உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது.  மேலும் அணைக்கு சுமார் 70 ஆயிரம் கன அடி நீர் வரை வர வாய்ப்புள்ளதால் அணைக்கு வரும் தண்ணீர் அனைத்தும் உபரி நீராக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

 எனவே காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் காவிரி கரையோர பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிக்க | பென்சில் கேட்டால் அம்மா அடிக்கிறார்: விலை உயர்வு குறித்து மோடிக்கு சிறுமி கடிதம்

இதனையடுத்து காவிரி கடையோர மக்களுக்கு தண்டோரா மூலம் வருவாய்த்துறையினர் அறிவிப்பு செய்து வருகின்றனர்.

கடந்த வாரம் இதே போல ஒரு லட்சத்துக்கு அதிகமான கன அடி நீர் உபரிநீராக திறந்து விடப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் உபரி நீர் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.