ஆறுமுகசாமி ஆணையத்துக்கு 14வது முறையாக அவகாசம் நீட்டிப்பு

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தமிழக அரசு மேலும் 3 வார காலம் அவகாசம் அளித்துள்ளது.
ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி
ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி
Published on
Updated on
1 min read

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தமிழக அரசு மேலும் 3 வார காலம் அவகாசம் அளித்துள்ளது.

ஆறுமுகசாமி ஆணையத்துக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட அவகாசம் இன்றுடன் முடிவடையவுள்ள நிலையில், மேலும் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், 14வது முறையாக ஆறுமுகசாமி ஆணையத்துக்கு காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் ஆறுமுகசாமி ஆணையம் கூடுதலாக 3 வார கால அவகாசம் வழங்கக் கோரி தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியது.

அதில், ஆணைய விசாரணை குறித்து எய்ம்ஸ் மருத்துவக் குழு ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே, மேலும் 3 வார காலம் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தது. 

அதனைத் தொடர்ந்து, மேலும் 3 வார காலம் அவகாசம் வழங்கி, ஆகஸ்ட் 24ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com