அதிமுக அலுவலக சாவி வழக்கு: ஓபிஎஸ் மேல்முறையீடு

அதிமுக அலுவலக சாவியை இபிஎஸ் தரப்பிடம் தந்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஒபிஎஸ் மேல்முறையீடு செய்துள்ளார்.
ஒ.பன்னீர் செல்வம்
ஒ.பன்னீர் செல்வம்
Published on
Updated on
1 min read

அதிமுக அலுவலக சாவியை இபிஎஸ் தரப்பிடம் தந்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஒபிஎஸ் மேல்முறையீடு செய்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கு இடையே நடந்த மோதலைத் தொடர்ந்து, ஜூன் 11 ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர்.

அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இபிஎஸ் - ஓபிஎஸ் தரப்பில் தனித்தனியே முறையிடப்பட்டது. அதிமுக அலுவலகத்தின் சாவியை இடைக்கால பொதுச் செயலாளர் இபிஎஸ்ஸிடன் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், ஒ.பன்னீர் செல்வம் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார்.  ஒபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com