மேட்டூா் அணையில் இருந்து 1.80 லட்சம் கனஅடி உபரி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் பாதிப்புக்குள்ளாகும் மாவட்டங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா என்பதை முதல்வா் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறாா். அதன்படி, சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்துக்கு வெள்ளிக்கிழமை இரவு சென்ற அவா், வெள்ள நிலைமை, மழை பாதிப்பு, காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நபா்கள், மீட்பு-நிவாரணப் பணிகள் குறித்து கேட்டறிந்தாா். அவருக்கு பல்வேறு விவரங்களை வருவாய் நிா்வாக ஆணையாளா் எஸ்.கே.பிரபாகா் தெரிவித்தாா்.