ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

எடப்பாடி அருகே குடியிருப்புகளில் புகுந்த வெள்ள நீர்! (படங்கள்)

எடப்பாடி அடுத்த காவிரிக்கரை பகுதிகளில் உள்ள பல்வேறு குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2022, 7:26 am

DIN

எடப்பாடி: மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், எடப்பாடி அடுத்த காவிரிக்கரை பகுதிகளில் உள்ள பல்வேறு குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். 

Story image

கடந்த சில தினங்களாக மேட்டூர் அணையிலிருந்து தொடர்ந்து அதிக அளவிலான உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

Story image

இதனை அடுத்து எடப்பாடி அடுத்த கோனேரிப்பட்டி அடுத்த மந்தியான் திட்டு, அக்ரஹாரம், பரிசல் துறை ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்டவற்றில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

Story image

இதனால் கடும் பாதிப்பிற்குள்ளான அப்பகுதி வாசிகள், தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் தாங்கள் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகி வருவதாகவும், தங்கள் பகுதியில் இருந்து பிரதான சாலையை இணைக்கும் சாலைகள் பல தண்ணீரில் மூழ்கியதால், குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாமலும், வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமலும் தாங்கள் அவதிப்பட்டு வருகிறோம் என்று வேதனை தெரிவித்தனர். 

Story image

மேலும், அதிகப்படியாக தேங்கிய தண்ணீரில் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் அதிக எண்ணிக்கையில் குடியிருப்புப் பகுதியில் நுழைவதால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் இப்பகுதியினை பார்வையிட்டு தங்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னலுக்குத் தீர்வு காண வேண்டுமென வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

Story image

தொடர்ந்து மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீர் அதிக அளவு திறக்கப்பட்டு வரும் நிலையில் மேலும் இப்பகுதியில் வெள்ள பாதிப்புகள் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.