மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

வேதாரண்யம்: துறைமுகம் கட்டும் பணிக்கு வந்த குழாய்களால் பரபரப்பு

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் துறைமுகம் அமைக்கும் பணிக்காக 25 லாரிகளில் ஏற்றி வந்த ராட்சத குழாய்களால் மக்களிடையே வியாழக்கிழமை இரவு முதல் பரபரப்பு நிலவியது.

News image

ஆதனூரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராட்சத குழாய்களுடன் வந்த லாரிகள்.

Updated On :5 ஆகஸ்ட் 2022, 12:06 pm IST


வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் துறைமுகம் அமைக்கும் பணிக்காக 25 லாரிகளில் ஏற்றி வந்த ராட்சத குழாய்களால் மக்களிடையே வியாழக்கிழமை இரவு முதல் பரபரப்பு நிலவியது.

வேதாரண்யம், ஆற்காட்டுத்துறையில் ரூ.150 கோடியில் துறைமுகம் கட்டும் பணிகள் இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக 25 லாரிகளில் குழாய்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இரவு நேரத்தில் லாரிகள் வந்துள்ளதால் பகல் நேரத்தில் குழாய்களை இறக்குவதற்கு ஏதுவாக நகரப் பகுதிக்கு முன்பாக ஆதனூர் கிராமத்தின் பிரதான சாலையோரங்களில் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே  இந்த குழாய்கள் ஹட்ரோ கார்பன் அல்லது ஓஎன்ஜிசி  திட்டப் பணிகளுக்கு வந்துள்ளதாக சந்தேகம் உள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவியது. 

இதையடுத்து, இதுகுறித்து விசாரித்த தனிப் பிரிவு போலீசார், இவை துறைமுகம் பணிக்கு வந்துள்ளதை உறுதி செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.