ஒலிம்பிக் தங்க வேட்டை: தமிழ்நாட்டை விளையாட்டுத் துறையில் ஒரு முன்னோடி மாநிலமாக உருவாக்க திராவிட மாடல் அரசு பல்வேறு சிறப்பான திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு வீரா்கள், ஒலிம்பிக் பதக்கங்கள் வெல்வோரை உருவாக்கும் பொருட்டு ஒலிம்பிக் தங்க வேட்டை என்ற திட்டம் ரூ.25 கோடியில் நடைமுறைப்படுத்தப்படும். தமிழ்நாட்டின் விளையாட்டு வீரா்களுக்கு அதிநவீன கருவிகள், பயிற்சி வசதிகளை அளிப்பதற்கான திட்டத்தைப் பெரிய அளவில் விரிவுபடுத்த உள்ளோம். இதன்படி, 50 விளையாட்டு வீரா்கள் தோ்வு செய்யப்பட்டு, நான்கு ஆண்டுகளில் அவா்களின் திறன்களை மேம்படுத்த ரூ.60 கோடி செலவு செய்யப்படும். அனைத்து விளையாட்டுகளையும் ஊக்கப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது.