தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சேலத்தில் ஆழ்துளை கிணற்றின் பம்பை அகற்றாமல் தார் சாலை: இரவோடு இரவாக அகற்றப்பட்டதால் பரபரப்பு

சேலம் மாநகராட்சி 28 ஆவது கோட்டத்துக்குட்பட்ட அப்புசாமி தெருவில் ஆழ்துளை கிணற்றின் பம்பை அகற்றாமல் புதைத்தபடி தார் சாலை போடப்பட்டு இரவோடு இரவாக அகற்றப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image

சேலம் மாநகராட்சி 28 ஆவது கோட்டத்துக்குட்பட்ட அப்புசாமி தெருவில் ஆழ்துளை கிணற்றின் பம்பை அகற்றாமல் போட்டுள்ள தார் சாலை.

Updated On :12 ஆகஸ்ட் 2022, 7:32 am

DIN

சேலம் மாநகராட்சி 28 ஆவது கோட்டத்துக்குட்பட்ட அப்புசாமி தெருவில் ஆழ்துளை கிணற்றின் பம்பை அகற்றாமல் புதைத்தபடி தார் சாலை போடப்பட்டு இரவோடு இரவாக அகற்றப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாநகராட்சி பகுதிகளில் தற்போது சாலைகள் போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பிரதான சாலைகள் அனைத்தும் தார் சாலைகளாக மாற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் சேலம் மாநகராட்சி 28 ஆவது கோட்டத்துக்குட்பட்ட அப்புசாமி தெருவில் பல ஆண்டுகளாக பழுதடைந்த நிலையிலிருந்த சாலையை மாநகராட்சி சார்பில் புதுப்பிக்கும் பணி நடைபெற்றுவருகிறது.

அப்போது, சாலை ஓரத்தில் பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் பழுதடைந்து நிலையில் இருந்த ஆழ்துளை கிணற்றின் பம்பை அகற்றாமல் அப்படியே தார் சாலையை போட்டுள்ளனர்.

Story image

இரவோடு இரவாக சம்பந்தப்பட்ட ஆழ்துளை கிணற்றின் பம்பை அகற்றி அதன் மீது மண்ணைக் கொண்டு மூடி உள்ளனர்.

ஒப்பந்ததாரர்களின் இந்த நடவடிக்கை செவ்வாய்பேட்டை வாசிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது

இது குறித்த தகவல் காட்டுதீ போல் பரவியதைடுத்து ஒப்பந்ததாரர்கள் இரவோடு இரவாக சம்பந்தப்பட்ட ஆழ்துளை கிணற்றின் பம்பை அகற்றி அதன் மீது மண்ணைக் கொண்டு மூடி உள்ளனர்.

ஒப்பந்ததாரரின் இந்த நடவடிக்கை பரபரப்பபை ஏற்படுத்தி உள்ளது.

வேலூா் மாநகரில் ஏற்கெனவே இருசக்கர வாகனம், ஜீப்பை அகற்றாமல் சாலை அமைக்கப்பட்டதன் தொடா்ச்சியாக, சத்துவாச்சாரியில் அடி பம்ப்பை அகற்றாமல் புதைத்தபடி கால்வாய் கட்டப்பட்ட சம்பவம் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது சேலத்தில் ஆழ்துளை கிணற்றின் பம்பை அகற்றாமல் போடப்பட்ட தார் சாலை இரவோடு இரவாக அகற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.