47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மானாமதுரை வீர அழகர் கோயில் தீர்த்தவாரி உற்சவம்: திரளான பக்தர்கள் தரிசனம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஸ்ரீ வீர அழகர் கோயில் நடைபெற்று வரும் ஆடிப் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நடைபெற்ற தீர்த்தவாரி உற்சவத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை வந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர். 

News image
மானாமதுரையில் ஆடி பிரம்மோற்சவ விழாவில் தீர்த்தவாரி உற்சவத்துக்காக வீர அழகர் குதிரை வாகனத்தில் பட்டத்தரசி கிராமத்தார் மண்டகப்படிக்கு புறப்பாடாகிச் சென்றார்.
Updated On :13 ஆகஸ்ட் 2022, 8:51 am

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஸ்ரீ வீர அழகர் கோயில் நடைபெற்று வரும் ஆடிப் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நடைபெற்ற தீர்த்தவாரி உற்சவத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை வந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர். 

சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்திற்கு உள்பட்ட மானாமதுரை வீர அழகர் கோயில் ஆடி பிரம்மோற்சவ விழாவில் 10 ஆவது நாளாக  தீர்த்தவாரி உற்சவத்துக்காக, கடந்த வெள்ளிக்கிழமை பட்டத்தரசி கிராமத்தார் மண்டகப்படிக்கு அழகர் புறப்பாடானார். இக்  கிராமத்தைச் சேர்ந்தவர்கள் திரளாக கோயிலுக்கு வந்து மேளதாளம், ஆட்டம் பாட்டத்துடன்  வீர அழகரை அழைத்துச் சென்றனர்.  கடைவீதிகளில் வியாபாரிகள் அழகருக்கு பூஜைகள் நடத்தினர். 

Story image

அலங்காரக் குளத்தில் சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.

குதிரை வாகனத்தில்  புறப்பட்டுச் சென்ற அழகர் மண்டகப்படிக்குப் போய்ச் சேர்ந்ததும் தீபாராதனை காட்டப்பட்டது. அதன்பின் மாலையில் அருகேயுள்ள அலங்காரக்குளத்தில் அழகருடன் உடன் வந்த சக்கரத்தாழ்வருக்கு தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. 

அதைத் தொடர்ந்து மண்டகப்படியில் அழகருக்கு திருமஞ்சனம் நடைபெற்று சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. இரவு முழுவதும் இங்கு தங்கி அருள்பாலித்த அழகர் சனிக்கிழமை காலை மண்டகப்படியிலிருந்து குதிரை வாகனத்தில்  கோயிலுக்கு புறப்பாடானார். அண்ணாமலை நகர் உள்ளிட்ட வீதிகளில் ஆரோகனித்து வந்த அழகரை மக்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பு வாசல் தெளித்து கோலமிட்டு வரவேற்று பூஜைகள் நடத்தி தரிசனம் செய்தனர். 

அதைத்தொடர்ந்து அழகர் கோயிலுக்குச் சென்றடைந்தார். அழகரின் தீர்த்தவாரி உற்சவத்தை முன்னிட்டு  பட்டத்தரசி கிராமம் விழாக்கோலம் பூண்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.