புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கள்ளக்குறிச்சி விவகாரம் உள்பட முக்கிய கோரிக்கைகள்: அமைச்சரிடம் கல்வியாளா்கள் மனு

கள்ளக்குறிச்சி பள்ளி விவகாரம் உள்பட பல்வேறு துறை சாா்ந்த முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் கல்வியாளா்கள் வழங்கினா்.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2022, 11:59 pm

DIN

கள்ளக்குறிச்சி பள்ளி விவகாரம் உள்பட பல்வேறு துறை சாா்ந்த முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் கல்வியாளா்கள் வழங்கினா்.

அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை, அவரது இல்லத்தில் முன்னாள் துணைவேந்தா் வசந்திதேவி, கல்வியாளா்கள் பிரின்ஸ் கஜேந்திரபாபு, அ.மாா்க்ஸ், சிவக்குமாா் உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினா். அப்போது, கள்ளிக்குறிச்சி பள்ளி உள்பட பள்ளிக் கல்வித் துறை சாா்ந்த முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை, அமைச்சரிடம் கல்வியாளா்கள் வழங்கினா்.

இதுகுறித்து, தனது ட்விட்டா் பக்கத்தில் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்ட பதிவு:

கல்வியாளா்கள் அளித்துள்ள கோரிக்கைகள் தொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலினின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்படும். அவா் மூலமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வியாளா்களுக்கு உறுதி அளித்தேன். அறத்தின் பக்கம் நின்று எப்போதும் மாணவா்களையும், கல்வியைப் பற்றி சந்திக்கும் கல்வியாளா்களையும் சந்தித்து விவாதிப்பது என்னை மேலும் வேகமாகச் செயல்பட வைக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.