புதுச்சேரியில் 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் என்று புதுவை பட்ஜெட்டில் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுவை மாநிலத்தில் 2022 - 23 ஆம் நிதி ஆண்டிற்காக ரூ. 10,696.61 கோடிக்கான பட்ஜெட்டை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றினார்.
அப்போது, பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ரங்கசாமி, குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 உதவித் தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
மேலும், அடுத்த முக்கிய அறிவிப்பாக, நடப்பாண்டு முதல் புதுச்சேரியில் 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் என்றும் 9 ஆம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு மிதிவண்டி மீண்டும் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
புதுவை பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு ரூ. 802 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இதையும் படிக்க | புதுவை சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல்: முக்கிய அறிவிப்புகள்!