தஞ்சாவூரில் மதுபானக் கடையை அகற்ற வலியுறுத்தி வணிகர்கள் கடையடைப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே மாட்டுமேஸ்திரி சந்து அமைந்துள்ளது. இந்த சந்து, தெற்கு வீதியும் - பழைய பேருந்து நிலையத்தையும் இணைக்கும் முக்கிய வழியாக உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்பவர்கள் என அனைவரும் இந்த வழியைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த பகுதியில் அரசு மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த மதுபானக் கடையில் மது குடிப்பவர்கள், அப்பகுதியில் செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்களையும், அப்பகுதியில் கடை வைத்திருக்கும் வணிகர்களிடம் தகராறில் ஈடுபடுவதால், இந்த மதுக் கடையை அகற்றுமாறு அப்பகுதி வணிகர்கள் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர். ஆனால், ஒவ்வரு மனு அளித்தும் இதுவரை கடை அகற்றப்படவில்லை.
இதனால் மதுபானக் கடையை அகற்ற வலியுறுத்தி, அப்பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வணிகர்கள் கடைகளை அடைத்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக கடையை அகற்றவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் கலை விழா போட்டிகள்

தோ்தல் நடத்தை விதிகள் அமல்: கடலூா் ஆட்சியா்

மோகனூா் கல்யாண பிரசன்ன பெருமாள் கோயில் குடமுழுக்கு

பிளஸ் 2 தோ்வு விடைத்தாள் மதிப்பீடு: ஏப். 8-இல் தொடக்கம்
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

