குரூப் 5ஏ தேர்வு: அறிவிப்பாணை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி

தமிழகத்தில் காலியாக உள்ள 161 பணியிடங்களை நிரப்ப, குரூப் 5ஏ தேர்வுக்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்டது.
குரூப் 5ஏ தேர்வு: அறிவிப்பாணை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி
குரூப் 5ஏ தேர்வு: அறிவிப்பாணை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி
Published on
Updated on
1 min read


தமிழகத்தில் காலியாக உள்ள 161 பணியிடங்களை நிரப்ப, குரூப் 5ஏ தேர்வுக்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்டது.

இன்று முதல் வரும் செப்டம்பர் 21-ஆம் தேதி வரை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் குரூப் 5ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், செப்டம்பர் 26 முதல் 28ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும் என்றும், தலைமைச் செயலகத்தில் பிரிவு அலுவலர், உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள 161 காலியிடங்களை நிரப்ப குரூப் 5 ஏ தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் டிசம்பர் 18ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com