தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

புதுச்சேரியில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக கனமழை!

புதுச்சேரி முழுவதும் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்து வரும் கனமழை காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

News image
Updated On :23 ஆகஸ்ட் 2022, 1:17 pm

DIN

புதுச்சேரி முழுவதும் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்து வரும் கனமழை காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

தமிழக கடலோர பகுதிகளில் மேல் வளிமண்டல சுழற்சி  நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், புதுச்சேரி முழுவதும் மாலையில் திடீரென கனமழை பெய்து வருகிறது. அண்ணாசாலை, உப்பளம், இந்திரா காந்தி சிலை, முதலியார்பேட்டை, உருளையன்பேட்டை, மூலகுளம் உள்ளிட்ட நகரப்பகுதிகளிலும், வில்லியனூர், பாகூர், கரிக்கலாம்பாக்கம், மடுகரை உள்ளிட்ட கிராமப்பகுதிகளிலும் பரவலாக இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்து வரும் கனமழை காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.