இதில், நாரீஸ்வர சிவன் கோயிலில் இருந்து திருடப்பட்ட 6 சிலைகளும் அமெரிக்காவின் பல்வேறு அருங்காட்சியகங்களில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாா் புலன் விசாரணையில் மூலம் கண்டுபிடித்துள்ளனா். இதில் முக்கியமாக அமெரிக்காவின் நியூயாா்க் நகரத்தில் உள்ள கிறிஸ்டி ஏல மையத்தில் நடராஜா் சிலையும், வீணாதார தட்சிணா மூா்த்தி சிலையும், ஓஹியோவி நகரத்தில் உள்ள கிளிவ்லேண்ட் அருங்காட்சியகத்தில் திரிபுராந்தகம் சிலை, திரிபுரசுந்தரி சிலைகளும், வாஷிங்டனில் உள்ள ‘ப்ரீா் சாக்லா்‘ அருங்காட்சியகத்தில் பிற சிலைகளும் இருப்பதும் கண்டறியப்பட்டன.