சீர்காழியில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் பாலஸ்தாபனம்: தர்மபுரம் ஆதீனம் தொடங்கி வைத்தார்

சீர்காழியில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் பாலஸ்தாபனத்தை தர்மபுரம் ஆதீனம் தொடங்கி வைத்தார்.
சீர்காழியில் பழமையான சிவன் கோயில் பாலஸ்தாபனத்தை தொடங்கி வைத்த தர்மபுரம் ஆதீனம்.
சீர்காழியில் பழமையான சிவன் கோயில் பாலஸ்தாபனத்தை தொடங்கி வைத்த தர்மபுரம் ஆதீனம்.
Published on
Updated on
1 min read


சீர்காழி: சீர்காழியில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் பாலஸ்தாபனத்தை தர்மபுரம் ஆதீனம் தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி பிடாரி வடக்கு வீதி கீழ் திசையில் சட்டைநாதர் தேவஸ்தானத்திற்கு உள்பட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் உள்ளது. இக்கோவிலில் மூலவர் பதினெண் புராணேஸ்வரர் உடையார் ஆகவும், அம்மன் சௌந்தரநாயகி அம்மன் காட்சி தருகின்றனர். 

சீர்காழியில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் பாலஸ்தாபனம் செய்யும் தர்மபுரம் ஆதீனம்.

ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோவில் மிகவும் சிதிலமடைந்து உள்ளது. இக்கோவிலுக்கு திருப்பணிகள் தொடங்கி குடமுழுக்கு நடத்திட தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் ஏற்பாட்டின் படி வியாழக்கிழமை பாலஸ்தாபனம் நடைபெற்றது. 

ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோயிலை பார்வையிட்ட தர்மபுரம் ஆதீனம்.

முன்னதாக சிறப்பு ஹோமம்  பூஜைகள் செய்து கோயில் திருப்பணிகளை அடிக்கல் நாட்டில் தருமபுரம் ஆதீனம் தொடங்கி வைத்தார். இதில், திருப்பணி குழுவினர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். 

பதினெண் புராணங்களை ஒன்றிணைக்கும் போது இக்கோவில் மூலவர் சிவபெருமான் புராணங்களை ஒன்றிணைக்கும் தலைவர் ஆக இருந்ததாக கோயில் வரலாறு கூறுகிறது. கோவில் குடமுழுக்கு நடைபெற்று சுமார் 50 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com